6 44
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் சொகுசு கார்

Share

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலிருந்து சொகுசு கார் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புதுக்கடை நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அதுருகிரிய பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிமருந்துகள் மற்றும் ஒரு சொகுசு கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏழு தோட்டாக்கள், M16 வகை ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தோட்டா, ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவையும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...