6 44
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் சொகுசு கார்

Share

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலிருந்து சொகுசு கார் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புதுக்கடை நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அதுருகிரிய பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிமருந்துகள் மற்றும் ஒரு சொகுசு கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏழு தோட்டாக்கள், M16 வகை ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தோட்டா, ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவையும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...