8 35
இலங்கைசெய்திகள்

அநுர மீது சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

Share

அநுர மீது சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் பணயக் கைதியாக மாறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு அநுரவிற்கு என்ற கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பெரிய கேக் ஒன்றை உருவாக்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுது நாடு, சர்வதேச நாணய நிதியத்திற்கு என்பதே தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையையும், தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கொள்கையுடன் ஒப்பீடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபன உறுதிமொழிகளில் எவ்வளவு விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அரசாங்கம் கூறிய போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பாதையை பின்பற்றிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் மக்கள் சார்ப்பு கொள்கைகளை காண முடியவில்லை என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மக்கள் ஆணையை உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மூன்றாண்டுகளில் சிறு தொகை அளவில் அதிகரிப்பதாகவும் அது இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு போதுமானதல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...