9 30
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

Share

இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்(donald trump) அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி (narendra modi)அமெரிக்கா சென்ற நிலையிலும் அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயற்பாடு நிறுத்தப்படவில்லை. இந்தியர்களை ஏற்றிய அமெரிக்காவின் இரண்டாவது விமானம் பஞ்சாபில் தரையிறங்கியது. அதேபோன்று இந்தியாவிற்கு அடுத்த இடியாக அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டொலர் நிதியையே இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமெரிக்க வரிசெலுத்துவோரின் டொலர்கள் பின்வரும் வகைகளுக்கு செலவிடப்பட இருந்தன. அவை அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், மோல்டோவா நாட்டுக்கான 22 மில்லியன் டொலர் மற்றும் இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டொலர் உட்பட பல்வேறு நாடுகளுக்கான நிதி நிறுத்தம் விவரம் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று நிதி நிறுத்தப்பட்டுள்ள நாடுகளின் விபரம் வருமாறு

வங்கதேசத்தில், அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்கு 29 மில்லியன் அமெரிக்க டொலர். நேபாளத்துக்கான பல்லுயிர் பாதுப்புக்கான 10 மில்லியன் டொலர். லைபீரியாவுக்கான 1.5 மில்லியன் டொலர். மாலி நாட்டுக்கான 14 மில்லியன் டொலர் தெற்கு ஆபிரிக்காவுக்கான 2.5 மில்லியன் டொலர் ஆசியாவுக்கு கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு 47 மில்லியன் டொலர் நிதி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...