17 8
இலங்கைசெய்திகள்

டிக்டொக்கை வாங்குவது தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு

Share

டிக்டொக்கை வாங்குவது தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு

டிக்டொக்(Tik Tok) செயலியை வாங்க தனக்கு விருப்பமில்லை என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) தெரிவித்துள்ளார்.

டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் சீனாவைச்(China) சேர்ந்தது என்பதால், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக்கை தடை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், ஜேர்மனியில் பெரும் செல்வந்தர் மத்தையாஸ் டெஃனர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் எலான் மஸ்க் டிக்டொக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், “டிக்டொக்கை வாங்க நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதை வாங்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை தனிப்பட்ட முறையில் டிக்டொக்கை பயன்படுத்துவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோபைடன் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவின்(USA) டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டொக் செயலி மூலம் அமெரிக்கர்களை சீனா உளவு பார்க்கிறது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற உடன், டிக்டொக் செயலி தடை செய்யப்படுவதை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

டிக்டொக் செயலியை தடை செய்வதை 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டிக்டொக் செயலி செயல்பட வேண்டும் எனில், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அதன் 50 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும், சீன நிறுவனத்தின் டிக்டொக் செயலியை தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கினால், அதனை வரவேற்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
court
இலங்கைசெய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்: குண்டுச் சம்பவங்களுடன் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று...

w 1280h 720format jpgimgid 01k941vebwvgjntwjfmrjvf3ysimgname trump 1762146498940
செய்திகள்உலகம்

இரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனை செய்கின்றன: அமெரிக்காவும் பரிசோதிப்பதில் தவறில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு...

Anil Ambani
இந்தியாசெய்திகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்தின் ₹ 7,500 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மீதான கடன் மோசடி வழக்குகளைத் தொடர்ந்து,...

images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....