14 12
இலங்கைசெய்திகள்

திடீரென மாயமான பொலிஸ் அதிகாரி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்Sri Lanka Police, news,

Share

திடீரென மாயமான பொலிஸ் அதிகாரி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்Sri Lanka Police, news,

டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரிடமிருந்த துப்பாக்கிகள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த துப்பாக்கிகளை அவர் வேறு யாரிடமாவது ஒப்படைத்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மவுண்ட் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இரவு வீதித்தடை கடமைக்காக T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர், அவர் கடமை நிலையத்திற்கு எந்த வித தகவலையும் வழங்கவில்லை என்பதோடு அவரின் அலைபேசிக்கு அழைக்க முயன்றும் அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் சந்தேகநபர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் – ஹலம்பகஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர் டுபாய்க்கு தப்பிச் செல்வதற்கு முன்னர் குறித்த துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், பொலிஸார் அவரின் உறவினர்களிடம் பெற்ற வாக்குமூலத்தில் அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...