2 11
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி – உடன் கைது செய்யுங்கள்: சரத் வீரசேகர ஆவேசம்

Share

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி – உடன் கைது செய்யுங்கள்: சரத் வீரசேகர ஆவேசம்

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக (University of Jaffna) வளாகத்தில் கறுப்புக்கொடி ஏமாற்றியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (6.5.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரதினத்தன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இலங்கைக்கொடி இறக்கப்பட்டு பிரதான கம்பத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

இந்த விடயம் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களையும் அவமதிக்கும் செயலாகும்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினர் இதற்கு இடமளித்தமை தொடர்பில் பொறுப்பு கூறவேண்டும்.

அவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். யாழ் பல்கலைக்கழகம் நாட்டு மக்களின் வரிப்பணத்திலேயே இயங்குகின்றது.

அதேபோன்று பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆகவே இது பொருத்தமற்ற செயலாகும். இந்த செயலைப் புரிந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

இனவாதத்தைத் தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி யாழ்.விஜயத்தின் போது குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய பின்னணியிலேயே சுதந்திர தினத்தன்று இத்தகைய விடயம் இடம்பெற்றுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...