உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்புக்குள் எழுந்த முரண்பாடுகள்: ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை!

Share
17 5
Share

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஓரினச்சேர்க்கையாளர்களை தூக்கிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஒரு பயங்கர தாக்குதலை நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக போர் பிரகடனம் செய்ததுடன் காசா மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் காசாவில் இருந்த பாலஸ்தீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் தலையிட்டு இடைக்கால போர் நிறுத்தம் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தின. இதன் விளைவாக, 2023 நவம்பரில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த போர் நிறுத்தத்தின் போது, 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்களும் பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஹமாஸ் தனது சொந்த அமைப்பினரையே சித்திரவதை செய்து கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தான் காரணமாக கூறப்படுகிறது.

காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

ஹமாஸின் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி கூட ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் ஹமாஸின் உள் முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் இஸ்ரேலை எதிர்த்து போராடும் ஹமாஸ், மறுபுறம் தனது சொந்த அமைப்பினரின் மனித உரிமைகளை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...