1 9
இலங்கைசெய்திகள்

திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் கையளிக்க முடியாது: வெளியான அறிவிப்பு

Share

யாழ்ப்பாணம் (Jaffna)-  திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும்,  அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில  இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

குறித்த கூட்டத்திற்கு , விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ , விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி , அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.

விகாரைக்கு உரிய காணியில் , பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம் , புத்த மெதுரா , போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள் , தியான மண்டபங்கள் , பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும்.அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...