6 7
இலங்கைசெய்திகள்

புதிய அரசியலமைப்பிற்கு தற்போது அவசியமில்லை – அநுர அரசு அதிரடி அறிவிப்பு

Share

புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டு வர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை நேற்று (5.2.2025) அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரத்துக்கு இணங்க பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பில் மாற்றமொன்று எமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு இணங்க நிச்சயமாக இடம்பெறும்.

ஆனால் அவசர அவசரமாக அரசமைப்பொன்றை உருவாக்க நாம் தற்போது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள் தான் ஆகின்றன. எமக்கு பொருளாதார சவாலை நிவர்த்தி செய்ய வேண்டிய பிரதான தேவை உள்ளது.

முதலில் நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும் சர்வதேச ரீதியாகவும் சில சவால்கள் காணப்படுகின்றன.

எனினும் நேரத்தை இழுத்தடிக்காமல் உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இப்போதே அனைத்தையும் செய்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...