11 5
இந்தியாஉலகம்செய்திகள்

அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்ட 104 இந்தியர்கள் நாடு திரும்பினர்: அடுத்து என்ன?

Share

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது.

அவர்கள் அனைவரும் சற்று முன், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளார்கள்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், சட்டவிரோத புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஏராளமானோர் நாடுகடத்தப்பட்டுவருகிறார்கள்.

அவ்வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெக்சாஸிலுள்ள சான் அண்டோனியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, சற்று முன் அமிர்தசரஸிலுள்ள ஸ்ரீ குரி ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் அந்த 104 பேரும், தத்தம் மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.

அவரவர் சார்ந்த மாநில அரசுகள், அவர்களை அவரவர் ஊர் கொண்டு சேர்ப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...