14 5
இலங்கைசெய்திகள்

அதிகாலைவேளை வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (04) அதிகாலைவேளை வந்திறங்கிய இளம் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு(colombo) தெமடகொடவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். ரூ.39.3 மில்லியன் மதிப்புள்ள 262 எலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (e-cigarettes)நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 2.35 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH 179 இல் இவர் வந்துள்ளார்.

இதன்போது காவல்துறை அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனையிட்டபோது 12,000 262 இ-சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார், பெப்ரவரி 7 ஆம் திகதி நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Share
தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...