8 7
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சுதந்திர தின வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம்

Share

மக்கள் விடுதலை முன்னணி (jvp) மற்றும் தேசிய மக்கள் சக்தி (npp) ஆகியவை முதல் முறையாக சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளன என எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக்க(Gayantha Karunathilleka) இன்று (04) தெரிவித்தார்.

” ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு போதும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை.

அவர்கள் முதல் முறையாக இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றது போல் தெரிகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சமிந்திரனி கிரியெல்ல, வி.ராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

“எங்கள் கடமை என்பதால் தான் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க நாங்கள் எப்போதும் தவறமாட்டோம் ” என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 213
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெதுரு ஓயா துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – அனைத்து உடல்களும் மீட்பு!

குருநாகல், கோபேகானே பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானவர்களில் எஞ்சியிருந்த...

world 212
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்...

world 211
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூபவாஹினி கூட்டுத்தாபன முறைகேடு வழக்கு: சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவருக்குப் பிணை!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன்...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...