9 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு!

Share

இந்திய இராஜதந்திர நகர்வுகளில் இம்முறையும் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய நிர்மலா சீத்தாராமன் இந்த விடயத்தை முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, இலங்கைக்கான உதவியில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய வரவு செலவு திட்டதில் முந்தையதைப் போலவே 300 கோடி இந்திய ரூபா இலங்கையுடனான பொருளாதார நட்புறவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமையை இங்கு அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்மையும் தமது நாடு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...