5 1
உலகம்செய்திகள்

காசாவை இலக்கு வைத்த ட்ரம்பின் அறிவிப்பு! மத்தியக்கிழக்கில் கடும் எதிர்ப்பு

Share

காசாவை சுத்தப்படுத்துவோம், பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்தானில் குடியமர்த்துவோம் என பரிந்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டமானது மத்தியகிழக்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்ததை தொடர்ந்து, எகிப்து மற்றும் ஜோர்தான் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

எனினும், இதற்கு இணங்க வேண்டும் என்று ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன்படி ட்ரம்பின் முன்மொழிவு பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி விமர்சகர்கள் இதனை “இன அழிப்பு” மற்றும் “போர்க்குற்றம்” என்று தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அரபு நாடுகளில் உள்ள பல நாடுகளும், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் இந்த யோசனையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.

இந்நிலையில் தற்போது எகிப்து, ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜியம், கட்டார், பாலஸ்தீன ஆணையம் மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பு ஆகியவை காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை தங்கள் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்கபோவதில்லை என கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

இவ்வாறான திட்டங்கள்”பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், மோதலை விரிவுபடுத்தும் அபாயமாகவும், அதன் மக்களிடையே அமைதி மற்றும் சகவாழ்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்” என்று அரபு அறிக்கை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில் தங்குவதை உறுதி செய்வதற்கு அரபு கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...