7 57
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

Share

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சமகால அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்க்கட்சி கட்சிகளை அடக்குவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணான முறையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கோப் குழு போன்ற குழுக்களின் தலைவர் பதவி, அப்போது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்திக்கு வழங்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசாங்கம் கோப் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் முடிவும் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது.

நாடாளுமன்றக் குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிக்கத் தவறியது குறித்தும் ரணிலுடனான சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க கூட்டியிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி. திகாம்பரம் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, மற்றும் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...