7 57
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

Share

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சமகால அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்க்கட்சி கட்சிகளை அடக்குவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணான முறையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கோப் குழு போன்ற குழுக்களின் தலைவர் பதவி, அப்போது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்திக்கு வழங்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசாங்கம் கோப் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் முடிவும் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது.

நாடாளுமன்றக் குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிக்கத் தவறியது குறித்தும் ரணிலுடனான சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க கூட்டியிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி. திகாம்பரம் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, மற்றும் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...