7 57
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

Share

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சமகால அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்க்கட்சி கட்சிகளை அடக்குவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணான முறையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கோப் குழு போன்ற குழுக்களின் தலைவர் பதவி, அப்போது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்திக்கு வழங்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசாங்கம் கோப் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் முடிவும் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது.

நாடாளுமன்றக் குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிக்கத் தவறியது குறித்தும் ரணிலுடனான சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க கூட்டியிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி. திகாம்பரம் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, மற்றும் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...