6 59
உலகம்செய்திகள்

அமெரிக்க விமான விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Share

அமெரிக்க விமான விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம், இராணுவ உலங்கு வானூர்தியுடன் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவருமே பலியாகியிருக்கலாம் என்று  கூறப்படுகின்றது.

கடந்த 25 வருடக்காலப்பகுதியில்; நடந்த மிக மோசமான அமெரிக்க விமானப் பேரழிவாக இருக்கக்கூடிய இந்த விபத்தின்போது, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு வோசிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, குறித்த விமானம், இராணுவ உலங்கு வானூர்தியுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து போடோமாக் நதியின் பனிக்கட்டி நீரில் இருந்து குறைந்தது 28 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விபத்தில் எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சந்தேகிக்கின்றனர் இடுப்பளவில் ஆழமான நீரில் இருந்து மூன்று பிரிவுகளாக விமானத்தின் உடல் தலைகீழாகக் கண்டெடுக்கப்பட்டது.

உலங்கு வானூர்தியின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் ஜெட் விமானம் வழக்கமான தரையிறக்கத்தை மேற்கொண்டபோது, உலங்கு வானூர்தி அதன் பாதையில் பறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை 2001 நவம்பர் 12 ஆம் திகதியன்று நியூயோர்க்கின் பெல்லி ஹார்பரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மோதியதில் அதில் பயணித் 260 பேரும் கொல்லப்பட்டதற்குப் பின்னர், நேற்றைய விபத்து, மோசமான அமெரிக்க விமான விபத்தாக கருதப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...