உலகம்செய்திகள்

ஜனாதிபதியாக ஏழாவது முறையாக தொடர்ந்து தெரிவாகும் புடினின் நண்பர்

Share
19 30
Share

பெலாரஸ்த் தலைவரும் ரஷ்யாவின் கூட்டாளியுமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தொடர்ந்த்கு 7வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

மேற்கத்திய அரசாங்கங்கள் பல மோசடி என நிகாரித்துள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட்ட மற்ற நான்கு வேட்பாளர்களிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்ளாத லுகாஷென்கோ, 86.8 சதவிகித வாக்குகளைப் பெற்றார்.

முன்னாள் சோவியத் குடியரசு நாடான பெலாரஸில் சுதந்திரமான ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், வாக்கெடுப்பு சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடக்கவில்லை என்று ஐரோப்பிய அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டுமின்றி, அனைத்து முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், பெலாரஸ் மக்களுக்கு வேறு வழியில்லை. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக ஏங்கும் அனைவருக்கும் இது ஒரு கசப்பான நாள் என்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது எதிர்க்கட்சிகளை சிறையில் அடைப்பது குறித்து கேட்டதற்கு, அவர்கள் தங்கள் சொந்த விதியைத் தெரிவு செய்து கொண்டதாக லுகாஷென்கோ பதிலளித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்புவதற்கான ஒரு களமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் பெராலஸைப் பயன்படுத்த அனுமதித்திருந்தார்.

கடந்த 1994 முதல் பெலாரஸ் ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்துவரும் லுகாஷென்கோ, தொடர்ச்சியாக 7வது முறையாக தேர்தலில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...