17 32
உலகம்செய்திகள்

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

Share

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் இன்றையதினம்(25.01.2025) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பணயக்கைதிகள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இரண்டாவது சுற்றில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் 200 பலஸ்தீனியக் கைதிகளை விடுத்துள்ளது.

எனினும், அர்பெல் யூஹுட்(Arbel Yehud) எனப்படும் பணயக்கைதி விடுவிக்கப்படாததால், போர்நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த பெண் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, தனது காதலுடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, அவரின் சகோதரர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் வாரம் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், பணயக்கைதிகளின் விடுதலையை உலகம் கொண்டாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலையான பணயக்கைதிகளின் பெற்றோரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...