உலகம்செய்திகள்

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

Share
17 32
Share

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் இன்றையதினம்(25.01.2025) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பணயக்கைதிகள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இரண்டாவது சுற்றில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் 200 பலஸ்தீனியக் கைதிகளை விடுத்துள்ளது.

எனினும், அர்பெல் யூஹுட்(Arbel Yehud) எனப்படும் பணயக்கைதி விடுவிக்கப்படாததால், போர்நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த பெண் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, தனது காதலுடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, அவரின் சகோதரர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் வாரம் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், பணயக்கைதிகளின் விடுதலையை உலகம் கொண்டாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலையான பணயக்கைதிகளின் பெற்றோரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...