4 51
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் பாலத்தின் அவசியத்தை உணர்த்திய எம்.பி

Share

இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் பாலத்தின் அவசியத்தை உணர்த்திய எம்.பி

இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் பாலம் வர்த்தகத்தை எளிதாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(24.01.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கையின் சொத்துக்களை, பொருளாதார மீட்சிக்காகப் பயன்படுத்தவேண்டிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவேகமாக முடிவெடுக்காவிட்டால், ஏராளமான வளங்கள் இருந்தபோதிலும், இலங்கை ஆழமான பொருளாதார நெருக்கடியில் விழும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது சாலை இணைப்பு தொடர்பான விவாதங்கள் இல்லாமையை அவர் குறையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாடு உட்பட இந்தியா உடனான இணைப்பின் சாத்தியமான நன்மைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

குறிப்பாக இது இலங்கையின் வடக்குப் பகுதிக்கு பயனளிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய முயற்சிகளின் சாத்தியமான நன்மைகளை விளக்க, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா இடையே பாலம் மற்றும் பிரான்ஸ்- இங்கிலாந்து இடையிலான சுரங்கப்பாதை போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் சர்வதேச உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...