4 51
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் பாலத்தின் அவசியத்தை உணர்த்திய எம்.பி

Share

இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் பாலத்தின் அவசியத்தை உணர்த்திய எம்.பி

இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் பாலம் வர்த்தகத்தை எளிதாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(24.01.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கையின் சொத்துக்களை, பொருளாதார மீட்சிக்காகப் பயன்படுத்தவேண்டிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவேகமாக முடிவெடுக்காவிட்டால், ஏராளமான வளங்கள் இருந்தபோதிலும், இலங்கை ஆழமான பொருளாதார நெருக்கடியில் விழும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது சாலை இணைப்பு தொடர்பான விவாதங்கள் இல்லாமையை அவர் குறையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாடு உட்பட இந்தியா உடனான இணைப்பின் சாத்தியமான நன்மைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

குறிப்பாக இது இலங்கையின் வடக்குப் பகுதிக்கு பயனளிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய முயற்சிகளின் சாத்தியமான நன்மைகளை விளக்க, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா இடையே பாலம் மற்றும் பிரான்ஸ்- இங்கிலாந்து இடையிலான சுரங்கப்பாதை போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் சர்வதேச உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...