20 27
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

Share

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

புலம்பெயர்தல் விதிகளில், குறிப்பாக H1-B விசா போன்ற விடயங்களில் அவர் என்ன மாற்றம் செய்வாரோ என்றெல்லாம் கவலையடைந்திருந்தார்கள் அவர்கள்.

இந்நிலையில், அவர்கள் பயந்ததுபோலவே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Mirchi9 என்னும் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், அமெரிக்காவில் வாழும் தங்கள் பிள்ளைகளை சந்திப்பதற்காக ஒரு இந்திய பெற்றோர் அமெரிக்கா சென்றதாகவும், Newark விமான நிலையத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அவர்கள் ஐந்து மாதங்கள் தங்கள் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கும் நோக்கில், B-1/B-2 visitor visaக்களுடன் பயணித்துள்ளார்கள்.

ஆனால், அவர்களிடம் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் return ticket இல்லை.

2025 விதிகளின்படி return ticket கட்டாயம் என அவர்களிடம் புலம்பெயர்தல் துறை அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

அத்துடன், அவர்கள் அங்கிருந்தே நேரடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

இந்த விடயம், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் இந்திய பயணிகளுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு அறிவிப்பு அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...