20 27
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

Share

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

புலம்பெயர்தல் விதிகளில், குறிப்பாக H1-B விசா போன்ற விடயங்களில் அவர் என்ன மாற்றம் செய்வாரோ என்றெல்லாம் கவலையடைந்திருந்தார்கள் அவர்கள்.

இந்நிலையில், அவர்கள் பயந்ததுபோலவே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Mirchi9 என்னும் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், அமெரிக்காவில் வாழும் தங்கள் பிள்ளைகளை சந்திப்பதற்காக ஒரு இந்திய பெற்றோர் அமெரிக்கா சென்றதாகவும், Newark விமான நிலையத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அவர்கள் ஐந்து மாதங்கள் தங்கள் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கும் நோக்கில், B-1/B-2 visitor visaக்களுடன் பயணித்துள்ளார்கள்.

ஆனால், அவர்களிடம் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் return ticket இல்லை.

2025 விதிகளின்படி return ticket கட்டாயம் என அவர்களிடம் புலம்பெயர்தல் துறை அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

அத்துடன், அவர்கள் அங்கிருந்தே நேரடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

இந்த விடயம், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் இந்திய பயணிகளுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு அறிவிப்பு அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...