13 35
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

தற்போது காணப்படும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவான டெண்டர் செயல்முறை மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (23) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறிப்பிட்டு, தற்போதைய முறையின் கீழ் புதிய கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான காலக்கெடுவை தொடர்பில் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

இதன்படி, இன்று (ஜனவரி 23) யாராவது நிகழ்நிலையில் முன்பதிவு செய்தால் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஆரம்ப திகதி ஜூன் 27 ஆகும்.இது சுமார் ஐந்து மாத காத்திருப்பு நேரத்தை பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டார்.

எனினும், அவசரகால நிகழ்வுகளுக்கு, ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கைகளை மதிப்பீடு செய்து அங்கீகரிக்க குடிவரவுத் துறைக்குள் ஒரு பிரத்யேக குழு நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த அமைப்பு வழக்கமான சேவைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் அதே வேளையில் அவசரநிலைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...