13 33
உலகம்செய்திகள்

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

Share

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

கனடாவில் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் உணவு ஆய்வாளர்கள் அமைப்பு (CFIA) சால்மொனெல்லா தொற்று அபாயம் காரணமாக ஆறு பிராண்டுகளின் முட்டைகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 18 அன்று அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவு குறிப்பிட்ட தொகுப்பு எண்ணிக்கைகளைக் கொண்ட பாக்கெஜ்களை திரும்பப்பெறும்.

தினசரி பயன்படுத்தப்படும் Golden Valley, Compliments, Foremost, IGA, No Name மற்றும் Western Family என்ற ஆறு பிராண்டுகளின் முட்டைகள்தான் திரும்ப பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட முட்டைகளை சேகரிக்க வேண்டிய தொகுப்பு எண்ணிக்கைகள் CFIA இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு அளவுகளில் கிடைக்கும் முட்டைகளுக்காகும்.

சால்மொனெல்லா தொற்றானது பொதுவாக கால்நடை மற்றும் மனித குடல்களில் காணப்படும் பாக்டீரியாகும்.

வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் ஆகும்.

பாதிக்கப்படுபவர்கள் பலர் சில நாட்களிலேயே குணமாகினாலும், ஒரு சிலர் நீண்ட கால உடல் நிலை சிக்கல்களுக்குப் போகக்கூடும்.

பாதிக்கப்பட்ட முட்டைகளை உட்கொள்ளவோ அல்லது விற்கவோ கூடாது. அவற்றை குப்பையில் வீசலாம் அல்லது வாங்கிய இடத்திலேயே திரும்ப கொடுக்கலாம்.

தொற்றைத் தடுக்கப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால் சால்மொனெல்லா அபாயத்தை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...