உலகம்செய்திகள்

கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் 25 சதவிகித வரிகள்: அமுலுக்கு வருவது எப்போது?

13 31
Share

கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் 25 சதவிகித வரிகள்: அமுலுக்கு வருவது எப்போது?

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலான ஆவணங்களில் கையெழுத்திட இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.

சமூக ஊடகம் ஒன்றில் ட்ரம்ப் வெளியிட்ட செய்தி ஒன்றில், ஜனவரி மாதம் 20ஆம் திகதி, தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், தான் கையெழுத்திட இருக்கும் முதல் ஆவணங்களில் ஒன்று கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலானதாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப் நேற்று பதவியேற்றதுமே புலம்பெயர்தலுக்கெதிரான நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்.

இதற்கிடையில், அவர் ஏற்கனவே எச்சரிந்திருந்தபடி கனடா மீது 25 சதவிகித வரிகள் எப்போது விதிப்பார் என்பது குறித்து அறிய உலகமே ஆர்வமாக உள்ளது.

இந்நிலையில், தான் ஏற்கனவே கூறியபடி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிப்பு அமுல்படுத்தப்படலாம் என மீண்டும் கூறியுள்ளார் ட்ரம்ப்.

அந்த வரி விதிப்பு பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரலாம் என ட்ரம்ப் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாடுகளும், போதைப்பொருட்களையும், எல்லை தாண்டி சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரையும் கட்டுப்படுத்தும்வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...