25 678e0df5b195c
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Share

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை விரைவில் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறை – கட்டுகருந்தவில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு சிறிது எடுக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கடனை திறைசேரி உள்வாங்கிய பிறகு எரிபொருளுக்கு ஒரு பாரிய வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திறைசேரி உள்வாங்கியுள்ளதாகவும், அந்தக் கடனை வசூலிப்பதாற்காகவே எரிபொருளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், கடனை அடைக்கும் வரையில் எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்காக கடன் செலுத்தும் காலத்தை விரைவில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க நிதி அமைச்சு, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...