14 35
உலகம்செய்திகள்

காசா போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவது எப்போது? விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் எண்ணிக்கை?

Share

காசா போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவது எப்போது? விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் எண்ணிக்கை?

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை இறுதியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த போர் நிறுத்த உடன்படிக்கை பிரித்தானிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

கத்தார் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் ஈடுபாட்டுடன் இடைத்தரகர்கள் மூலம் ஏற்பட்ட இந்த உடன்படிக்கை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 15 மாத போரை ஆறு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும்.

கத்தார் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தத்தை சில நாட்களுக்கு முன்பே அறிவித்த போதிலும், ஒரு நாள் கழித்தே போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு அங்கீகரித்தது.

இந்த ஒப்பந்தத்தில் ஹமாஸ் கைப்பற்றிய பல பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு மாற்றாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது.

விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து விடுவிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை மாறுபடும், இது 990 முதல் 1,650 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உடன்படிக்கையின் முதல் கட்டத்தில், 98 பிணைக் கைதிகளில் 33 பேர் அடுத்த ஆறு வாரங்களில் விடுவிக்கப்படுவார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, 98 பிணைக் கைதிகளில் பாதி பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது இந்த ஆரம்ப ஆறு வார கால கட்டத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்படும்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...