2 28
இலங்கைசெய்திகள்

பாணின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

Share

பாணின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 25ரூபாவினால் குறைக்கப்பட்டால், பாண் ஒன்றினை 100 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்ததாவது,“டொலரின் மதிப்பு குறைந்திருந்தாலும், ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.

கோதுமை மாவு இறக்குமதிக்கு கிலோவுக்கு விதிக்கப்படும் ரூ.45 வரியைக் குறைத்து, கோதுமை மாவை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டால், நிறுவனங்களின் ஏகபோகம் உடைக்கப்படும்.

மேலும், உலக சந்தையில் ஒரு கிலோ வெண்ணெயின் விலை ரூ. 400 ஆக இருந்தாலும், உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ வெண்ணெயின் ரூ. 900 க்கு விற்கப்படுகிறது.

அத்துடன், வெண்ணெயின் மீது விதிக்கப்படும் கிலோவிற்கு 600 ரூபா என்ற வரி குறைக்கப்பதுடன் யார் வேண்டுமானாலும் வெண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதித்தால், அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாய் கிடைக்கும்.

இவை சாத்தியமாகுமானால் பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும்.

இதேவேளை, பாணின் விலை உயர்வு காரணமாக பாண் நுகர்வு குறைந்துள்ளது.” என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோதுமை மாவு மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...

26 697304b4809de
செய்திகள்உலகம்

உலக வரலாற்றில் முதல் முறை: 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து தங்கம் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க...