3 28
உலகம்செய்திகள்

உக்ரைனின் அதிரடி ஆட்டம் : ரஷ்யாவிற்குள் ஊடுருவிய 146 ஆளில்லா விமானங்கள்

Share

உக்ரைனின் அதிரடி ஆட்டம் : ரஷ்யாவிற்குள் ஊடுருவிய 146 ஆளில்லா விமானங்கள்

ரஷ்யா (Russia) முழுவதும் தீவிரமான 146 ஆளில்லா விமான தாக்குதலை உக்ரைன் (Ukraine) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து நேற்றைய தினம் (14.01.2025) இந்த ஆளில்லா விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாக்குதலில், 146 ஆளில்லா விமானங்கள் மற்றும் பல ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட 6 ATACMS குறுகிய வரம்பு ஏவுகணைகள் மற்றும் பிரிட்டனால் வழங்கப்பட்ட 6 Storm Shadow கப்பல் ஏவுகணைகள் அடங்கும்.

இந்த தாக்குதல்கள் எங்கெல்ஸ், சரடோவ், கசான், பிரியான்ஸ்க் மற்றும் துலா உள்ளிட்ட பரந்த பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

ஆயுத உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளும் இதன் போது குறிவைக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதல்களை “பெருமளவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்” என்று வர்ணித்துள்ளதுடன் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளின் நடவடிக்கைகள் தண்டிக்கப்படாமல் இருக்காது என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....