10 27
இலங்கைசெய்திகள்

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Share

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின்(india cricket ) தலைவர் ரோாகித் சர்மா(rohit sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை திடீரென விலக்கி கொண்டது அந்த அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு(Gautam Gambhir) பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா(india) அவுஸ்திரேலிய(australia) டெஸ்டின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியது அவரது ஓய்வுக்கான முன்னறிவிப்பு என பலர் கருதினர். முதல் மூன்று போட்டிகளில் ரோகித் ஆட்ட திறனில் இல்லாததும் கடைசி போட்டியில் இருந்து விலகியதும் பேசுபொருளானது.

இருப்பினும் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார். அதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ஓய்வு அறையில் என்ன நடந்தது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன.

அதில், ரோகித் சர்மா டெஸ்டுக்குப் பிறகு விலக முடிவு செய்தார் என்றும் ஆனால் அவருக்கு நெருக்கமான நலன் விரும்பிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரோகித் ஓய்வு அறிவுக்கும் முடிவில் இருந்து யு டர்ன் அடித்தது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும், ரோகித் ஓய்வு பெறுவதையே கம்பீர் விரும்பினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்கள் தற்போது கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...