7 29
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள இந்திய உளவுத்துறை ராே …! அர்ச்சுனாவின் பின்னணி – சாடும் அமைப்பாளர்

Share

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள இந்திய உளவுத்துறை ராே …! அர்ச்சுனாவின் பின்னணி – சாடும் அமைப்பாளர்

இந்தியாவின் ராே (RAW) ஒத்து சேவையைச் சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் சூது பொருளாதாரம் ஒன்றையே மேற்கொள்ளப்போகிறது. அதாவது சூது விளையாடி பணம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தயாரிக்கவே முயற்சிக்கிறது.

சீனாவிடம் (China) கடன் பெற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பத ன் விளைவு என்ன என்பதை எங்களுக்கு கண்டுகொள்ள முடியும்.

துறைமுகத்தை நிர்மாணிக்க பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்தார்கள்.

அதேநிலையே இந்தியாவுடனும் எங்களுக்கு ஏற்படும். அத்துடன் அதானிக்கு உலகில் எங்கு பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை, நாங்கள் இங்கு அதானியுடன் பணியாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இது யாரும் கேட்டதற்கு ஜனாதிபதி தெரிவித்த ஒன்று அல்ல. இது முன்கூட்டிய அறிவிப்புகள். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துக்கு 2016ல் பாரிய எதிர்ப்பு வந்தது.

இறுதியில் அந்த ஒப்பந்ததை வாபஸ் பெற்றுக்கொண்டது.அந்த எதிர்ப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி பாரியளவில் முன்னின்று செயற்பட்டு வந்ததை நாங்கள் கண்டோம்.

ஆனால் மீண்டும் அந்த எட்கா ஒப்பந்தம் பேச்சுக்கு வந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கையின் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்க செயற்பட்டு வருவதாக எமக்கு நினைக்க தோன்றுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீரென தோன்றினார். இப்போது அவர் இல்லை.

ஆனால் இன்று வடக்கின் பேச்சாளராக செயற்பட்டு வருவது யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள வைத்தியர் அர்ச்சுனா. அர்ச்சுனா போன்றவர்களை கொண்டு வந்து இந்தியா என்ன செய்யப்போகிறது என எமக்கு தெரியாது.

அதேநேரம் உத்தியோகபூர்வமற்ற தகவலின் பிரகாரம் இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள்.

அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...