16 14
இலங்கைசெய்திகள்

கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம் : வெளியான தகவல்

Share

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோப் குழுத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மட்டுமே செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் ஏனைய நாடாளுமன்றக் குழுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...