14 10
உலகம்செய்திகள்

646 முறை அதிர்வுகள்! திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்

Share

646 முறை அதிர்வுகள்! திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்

திபெத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு 646 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்திற்கு பிறகு, புதன்கிழமை நண்பகல் நிலநடுக்கம் மொத்தம் 646 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் 188 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் எனக் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தொலைத்தொடர்பு, சாலைகள் மற்றும் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு சீன செஞ்சிலுவைச் சங்கம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டாவது தொகுதி நிவாரணப் பொருட்களை ஒதுக்கியது. இதில் பருத்தி கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மடிப்பு படுக்கைகள் போன்ற 4,300 பொருட்கள் அடங்கும்.

மேலும் சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், “அவசரகால சுகாதார கழிப்பறைகள், கேட்டரிங் வாகனங்கள் மற்றும் கேம்பர் வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால மீட்புப் பொருட்களைக் கொண்டு 50க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் RCSC-ஆல் அனுப்பப்பட்டனர்” என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...