5 16
இலங்கைசெய்திகள்

HMPV வைரஸ் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

தற்போது சீனா (China) முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் (University of Sri Jayewardenepura) நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வைரஸ் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கண்டி (Kandy) மாவட்டத்திலும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குளிர் காலத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாக, இந்த வைரஸ் குறித்து இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...