12 7
உலகம்செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 3000 கோடிக்கு மேல் வருமானம்.., இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது?

Share

ஆண்டுக்கு ரூ. 3000 கோடிக்கு மேல் வருமானம்.., இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது?

பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.

ரயில்வே டிக்கெட்டுகளுக்காக ஆண்டுதோறும் மானிய தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்படுகிறது.

இதனால் ரயில் பயணிகள் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை பெற்று வருகிறார்கள்.

மொத்தம் 7300 க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு 13000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள்.

ரயில் டிக்கெட்டுகளை தவிர்த்து பிளாட்பார்ம் டிக்கெட், விளம்பரங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படும் கடைகள், காத்திருப்பு அறைகள், பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் ரயில் நிலையங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

அந்தவகையில் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட ரயில் நிலையமாக புதுடெல்லி ரயில் நிலையம் உள்ளது.

இங்கு ஆண்டு ஒன்றுக்கு 3300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 – 24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

மேலும் புதுடெல்லி ரயில் நிலையம் அதிகமான பயணிகளை கையாளக்கூடிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு சுமார் 4 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...