3 8
சினிமாபொழுதுபோக்கு

நித்யாமேனன் பேய் போன்றவர்.. கிருத்திகா உதயநிதி கூறிய ஷாக்கிங் தகவல்

Share

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நித்யாமேனன்.

தமிழில் இவர் நடித்து வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு கொடுத்தது.

தற்போது, நித்யாமேனன் கிருத்திகா உயதநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 14 – ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று வெளிவர உள்ளது.

தற்போது, படக்குழுவினர் படத்தின் ப்ரோமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், கிருத்திகா பேட்டி ஒன்றில் நித்யாமேனன் குறித்து பகிர்ந்த விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நித்யா பேய் போன்று நடிப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் நடிப்பை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். நாம் நினைத்தது போன்று அவர் நடிக்கவில்லை என்றால் பிரச்சனை அவரிடம் இல்லை. நம்மிடம் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று டேக்குகளுக்கு மேல் நடிக்க மாட்டார், அப்படி அவரிடம் ரீ டேக் கேட்டால் உங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லுமாறு கேட்பார். நாம் கேட்பது போல் நடித்து கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...