dd 1
இலங்கைசெய்திகள்

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

Share

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

2025 ஆம் ஆண்டில்  சிறிலங்கா விமானப்படை(sri lanka air force) ஒன்பது புதிய விமானங்களைப் பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து(us) எட்டு பெல் 206 உலங்கு வானூர்திகளும் பாகிஸ்தானில் (pakistan)இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானமும் கிடைக்கவுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்கா எட்டு TH-57 சீ ரேஞ்சர் பெல் 206 உலங்கு வானூர்திகளை விமானப்படைக்கு வழங்கும் என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிறிலங்கா விமானப்படையின் விமானத் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த உலங்கு வானூர்திககள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் விமானப்படைக்கு பாகிஸ்தான் ஜெட் விமானம் கிடைக்கும் என்றும், விமானப்படை கடற்படையை மேலும் பலப்படுத்தும் என்றும் விமானப்படை தளபதி கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானமும், டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் (australia)இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானமும் கிடைத்தன.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...