dd 1
இலங்கைசெய்திகள்

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

Share

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

2025 ஆம் ஆண்டில்  சிறிலங்கா விமானப்படை(sri lanka air force) ஒன்பது புதிய விமானங்களைப் பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து(us) எட்டு பெல் 206 உலங்கு வானூர்திகளும் பாகிஸ்தானில் (pakistan)இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானமும் கிடைக்கவுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்கா எட்டு TH-57 சீ ரேஞ்சர் பெல் 206 உலங்கு வானூர்திகளை விமானப்படைக்கு வழங்கும் என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிறிலங்கா விமானப்படையின் விமானத் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த உலங்கு வானூர்திககள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் விமானப்படைக்கு பாகிஸ்தான் ஜெட் விமானம் கிடைக்கும் என்றும், விமானப்படை கடற்படையை மேலும் பலப்படுத்தும் என்றும் விமானப்படை தளபதி கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானமும், டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் (australia)இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானமும் கிடைத்தன.

Share
தொடர்புடையது
ginger
இலங்கை

இஞ்சி செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக...

Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...