13
இலங்கைசெய்திகள்

2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் திடுக்கிடும் கணிப்புக்கள்

Share

2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் திடுக்கிடும் கணிப்புக்கள்

உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடி வரும் நிலையில், வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளான நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன.

1996 இல் இறந்த பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா மற்றும் 1566 இல் இறந்த பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ் ஆகிய இருவரும் எதிர்வரும் வருடங்களில் நடக்கப்போகும், முக்கிய விடயங்கள், அழிவுகள், போர்கள், இயற்கை சீற்றங்கள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை துல்லியமாக கணித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எஃப் கென்னடி, அடோல்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் இதுவரையான உலக போர்கள், இளவரசி டயானாவின் சோகமான விபத்து மற்றும் மரணம், அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றி ஆகியவை அனைத்தும் இவர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் விடயங்கள் தொடர்பான பாபா வங்காவின் கணிப்புக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐரோப்பாவில் மக்கள் தொகையை பாதிக்கும் அளவு மிகப் பெரிய போர் உலக அளவில் மிகப் பெரிய சக்தியாக ரஷ்யா எழுச்சி பெறுதல், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில் முக்கிய நில அதிர்வு மற்றும் தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்படும், இறந்த எரிமலைகள் மீண்டும் உயிர்பெறுதல் உள்ளிட்ட பல கணிப்புக்களை பாபா வங்கா கணித்துள்ளார்.

இதேவேளை, பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ, ஐரோப்பிய எல்லையில் தீவிரமான போர்கள், பிரிட்டனுக்குள் உள்நாட்டு போர் மற்றும் நோய் தாக்கம், பழைய கொள்ளை நோய் திரும்புதல், பாரம்பரிய மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகை கட்டுப்படுத்தும் சக்தி மாறுதல் போன்ற கணிப்புக்களை கணித்துள்ளார், பாபா வங்கா 20 ஆம் நூற்றாண்டில் பல்கேரியாவில் வாழ்ந்தவர்.

நாஸ்ட்ராடமஸ் 16ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் பகுதியில் வாழ்ந்தவர், பல ஆண்டுகள் மற்றும் கலாசார வித்தியாசத்துடன் வாழ்ந்த தீர்க்க தரிசிகளின் கணிப்புக்களில் சில ஒரே மாதிரியானவை.

2025 ஆம் ஆண்டு உலகின் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாடு மாறுதல் மற்றும் ஐரோப்பாவில் பெரும் போர் ஆகிய விடயங்களை இருவரும் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...