9 42
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கவுள்ள கண்டங்கள்: விஞ்ஞானிகளின் அதிரவைக்கும் எச்சரிக்கை!

Share

நீரில் மூழ்கவுள்ள கண்டங்கள்: விஞ்ஞானிகளின் அதிரவைக்கும் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் காலநிலை மிக வேகமாக மாற்றமடையும் நிலையில், விஞ்ஞானிகள் அதிரவைக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1986ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து இந்த பனிப்பாறை உடைந்து பிரிந்தது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதற்கு ஏ23ஏ(A23a) என்று பெயரிடப்பட்டதுடன் சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்து வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது.

அவ்வாறு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கும் நகராமல் உறைந்து இருந்த அந்த மிகப்பெரிய பனிப்பாறை தற்போது உடைய தொடங்கி உள்ளதுடன் நகர தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏ23ஏ பனிப்பாறை மேலும் உடைந்து உருகுவதனால் கடலில் நீர் மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், கடல் நீர் மட்டம் உயர்வதால் பல கண்டங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...