1 29
உலகம்செய்திகள்

அசர்பைஜான் விமான விபத்து: தடயங்களை கைப்பற்றிய அமெரிக்கா!

Share

அசர்பைஜான் விமான விபத்து: தடயங்களை கைப்பற்றிய அமெரிக்கா!

அசர்பைஜான் விமான விபத்து தொடர்பில் பல்வேறு தடயங்களை அமெரிக்கா(US) கைப்பற்றியுள்ளதான அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி(John kirby) வெளியிட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விபத்து தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா உதவும் என கிர்பி கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்களை விட அதிகமான தடயங்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

விமானத்தின் ஜிபிஎஸ் சிஸ்டம், மின்னியல் கருவிகள் சேதமடைந்ததாக அசர்பைஜான் நம்புவதாக விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதலால் அது சேதமடைந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.

எனினும், அசர்பைஜான் ரஷ்யா மீது குற்றம்சாட்டவில்லை. ஆனால் அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ரஷாத் நபியேவ் கூறுகையில், விமானம் ‘வெளிப்புற குறுக்கீட்டால்’ பாதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

க்ரோஸ்னிக்கு மேலே விமானம் பறந்த போது மூன்று வெடிப்புகள் கேட்டதாக உயிருடன் திரும்பிய பயணிகள் கூறியுள்ளனர்“ என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...