19 24
உலகம்செய்திகள்

சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்

Share

சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்

சிரியாவில் வீதியோரம் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் எரிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய சிரியாவின் சுகைலாபியா(Suqaylabiyah) நகரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் தீ மூட்டி எரிக்கப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனையடுத்து, சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்தி எழுச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மரத்தை தீ மூட்டுவதற்காக முகமூடி அணிந்தவர்கள் மரத்தில் திரவமொன்றை ஊற்றுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....