19 24
உலகம்செய்திகள்

சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்

Share

சிரியாவில் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்! போராட்டத்தில் குதித்த கிறிஸ்தவர்கள்

சிரியாவில் வீதியோரம் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் எரிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்திய சிரியாவின் சுகைலாபியா(Suqaylabiyah) நகரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் தீ மூட்டி எரிக்கப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனையடுத்து, சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்தி எழுச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மரத்தை தீ மூட்டுவதற்காக முகமூடி அணிந்தவர்கள் மரத்தில் திரவமொன்றை ஊற்றுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...