22 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கிக்கு மத்திய வங்கி அபராதம்

Share

இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையானது இலங்கை பெருமதியில் (LKR) இரண்டு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்தியன் வங்கியானது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு கிளைகளுடன் இயங்கி வருகிறது.

“இலங்கையில் உள்ள இந்தியன் வங்கியும் அதன் கிளைகளும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன” என்று மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.

இருப்பினும், அபராதத்திற்கான காரணம் தொடர்பில் இந்தியன் வங்கி எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...