1 21
இலங்கைசெய்திகள்

மாகாணங்களுக்கு இடையில் அநுரவால் அவசரமாக அமைக்கப்படும் விசேட புலனாய்வு பிரிவு

Share

மாகாணங்களுக்கு இடையில் அநுரவால் அவசரமாக அமைக்கப்படும் விசேட புலனாய்வு பிரிவ

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 9 மாகாணங்களுக்கு இடையில் இராணுவத்தை அமைத்தால் அது அனைத்துலக ஊடகங்களிலும் கேள்விக்குட்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, குற்றச் செயல்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை மாகாணங்களுக்கிடையில் அமைப்பது போன்ற ஒரு போர்வையில் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்திற்கு எதிராக அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இருந்தும் இளைஞர்கள் பெருமளவில் கொழும்பை வந்தடைந்தனர்.

இது கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. எனவே, இவ்வாறானதொரு நிலை தனது அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் நோக்கம் இனிவரும் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது ஆகும்.

Share
தொடர்புடையது
world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...

world 103
விளையாட்டுசெய்திகள்

மதீஷா பத்திரானா உடற்தகுதி தேர்வில் வெற்றி: கேகேஆர் அணியில் இணைய பச்சைக்கொடி!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா, இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடத்திய...

world 102
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று பிற்பகல் பலத்த மின்னலுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!

இன்று (ஏப்ரல் 12, 2026) பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான...

world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...