21 1 1
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு

Share

கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் 156.4 வீதத்தினால் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளன.

அதன் பிரகாரம் சுட்டியொன்றின் பெறுமதி 14,810 ஆகும். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.

அண்மையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்குச் சந்தை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
mervin silva 1024x576 1
செய்திகள்அரசியல்இலங்கை

150 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக வங்கி அதிகாரிகள் சாட்சியம்!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அப்பாற்பட்டுச் சொத்துக்களைக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்...

images 2 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தந்தை தூங்கியபோது கையிலிருந்து நழுவி விழுந்த 2 மாதக் குழந்தை பலி – தந்தை கைது!

அளுபோமுல்ல, படதொப துடுவ பிரதேசத்தில் தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை, சிகிச்சை...

MediaFile 5 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி நீர் வெளியேற்றும் பணி ஆரம்பம் – நிலத்தை மாற்ற நீதிமன்றம் தடை!

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்...

images 4 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...