21 1 1
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு

Share

கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் 156.4 வீதத்தினால் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளன.

அதன் பிரகாரம் சுட்டியொன்றின் பெறுமதி 14,810 ஆகும். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.

அண்மையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்குச் சந்தை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...