13 22
இலங்கைசெய்திகள்

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

Share

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தை(Jaffna) வந்தடைந்துள்ளனர்.

அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம்(21) விடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்தனர்.

இதன் பின்னர் இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று(21) விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...