5 37
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இலவச உரத்தின் தரம் குறித்து வெளியான அறிவிப்பு

Share

ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இலவச உரத்தின் தரம் குறித்து வெளியான அறிவிப்பு

ரஷ்யாவில் (Russia) உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியூரேட் பொட்டாஷ் உரத்தின் (Muriate of Potash) இருப்பு தரத்திற்கு ஏற்ப உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை விவசாயம், கால்நடை வளங்கள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

உர கையிருப்பின் நிறம் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே சில விவாதங்கள் நடந்ததால், அமைச்சு இது தொடர்பாக விசாரணை முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையில் மண் விஞ்ஞான நிபுணர் ரேணுகா சில்வா (Renuka Silva) இந்த உரங்களின் தரத்தை சான்றளித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் எவ்வித சட்டவிரோத அச்சமும் கொள்ள வேண்டாம் என விவசாய அமைச்சு (Ministry of Agriculture) விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை கடந்த 18ஆம் திகதி விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...