7 23
இலங்கைசெய்திகள்

அரிசிக்கு இனி QR குறியீடு – உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அரிசிக்கு இனி QR குறியீடு – உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு தொடருமானால் அரிசிக்கும் QR குறியீடு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. எச். காமினி தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையில் அரிசி மற்றும் நெல் விலைகள் எப்போதும் இரண்டு அல்லது மூன்று பெரிய ஆலை உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு அரசாங்கமும் அவர்கள் சொன்ன விலைக்கு கீழ் வர வேண்டும். இந்தமுறையும் அரிசியின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க முடிந்தது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் எப்போதும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசியை வாங்குகின்றனர். ஆனால், கடைவீதிகளில் விலைவாசி உயர்ந்துள்ளதால், நாட்டில் கிடைக்கும் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கி சேமித்து வருகின்றனர்.

அப்படியானால், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் குறைவாக வாங்குவார்கள். ஏனெனில் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசியை வாங்கவும் விற்கவும் முடியாது.

இப்போதும் கூட, அறுபது சதவீதத்திற்கும் (60%) அரிசி சிறு மற்றும் நடுத்தர வணிகர்களால் சந்தைக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் கைவசம் பெரிய அளவில் நெல் இல்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர மக்கள் நெல்லை வாங்கி தினமும் வெட்டி சந்தைக்கு விடுகின்றனர்.

இதற்கிடையில், பெரிய அளவில் நெல் இருப்பு வைத்துள்ளவர்கள், சிறு, குறு வியாபாரிகளின் நெல் கையிருப்பு தீர்ந்தால் தான், நெல் இருப்புகளை வெளியிட துவங்குகின்றனர். நெல் இருப்பு வைத்துள்ள சிலருக்கு ஆலைகள் கூட இல்லை.

இது ஒரு மோசடி. இப்படி செயற்கை அரிசி தட்டுப்பாட்டைக் காட்டிவிட்டு, ஒரே நேரத்தில் அரிசி விலையை பெருந்தொழில் செய்பவர்கள் உயர்த்துகிறார்கள். அதன் மூலம் அரிசியுடன் மறைத்து வைத்திருக்கும் நெல்லை விற்பனை செய்து அதிக விலைக்கு விற்று பெரும் இலாபம் ஈட்டுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....