fire
உலகம்செய்திகள்

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு

Share

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு

கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களை எட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும் கரும்புகை மண்டலம் எழுவதையும் தீப்பிளம்புகள் தெரிவதையும் கிறீஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன. நகரில் அடுத்தடுத்து மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் குண்டுகளை வீசுகின்ற இருபது தீயணைப்பு விமானங்களும் பல நூற்றுக்கணக்கான வீரர்களும் தீயை அணைப்பதற்குப் போராடி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட வெளிநாடுகள் பலவும் அப்பணிகளில் இணைந்துள்ளன. தீ நெருங்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நகரின் வர்த்தக சங்கத் தலைவர் தனது களஞ்சியம் ஒன்றில் மூச்சிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

வெப்ப அனல் கிறிஸ் நாட்டை “எளிதில் தீப்பற்றும் பொருளாக” (powder keg) மாற்றியிருக்கிறது என்று அந் நாட்டின் பிரதமர் நிலைமையை வர்ணித்திருக்கிறார். கிறீஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாகிய தொன்மை மிகுந்த ஒலிம்பியா (Olympia) நகரம் மற்றும் ஏவியா தீவு (island of Evia) உட்பட 158 இடங்களில் காட்டுத்தீ மூண்டிருக்கிறது. தொடர்ந்து வீசி வருகின்ற அனல் காற்று தீயை மேலும் தீவிரமாக்கி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் நாட்டில் 40 செல்ஸியஸ் அளவுக்கு மேல் (107 degrees Fahrenheit) வெப்பம் பதிவாகி இருக்கிறது. “பருவநிலை மாற்றத்தின் நிஜமான விளைவு இது” என்று கிறீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) தெரிவித்திருக்கிறார்.

கிறீஸ் நாட்டைப் போன்று இத்தாலி உட்பட ஜரோப்பாவின் வேறு பல பகுதிகளிலும் கடும் வெப்பமும் காட்டுத் தீயும் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான துருக்கி அதன் வரலாற்றில் கண்டிராத பெரும் காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளது. துருக்கியின் தெற்கு மத்தியதரை கரையோரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். அனல் மின் நிலையம் (Thermal Power Plant) அமைந்துள்ள பகுதியை தீ நெருங்கியுள்ளதால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர உதவிகளை துருக்கிக்கு வழங்கியுள்ளது.

“டிக்ஸி தீ” (Dixie Fire) என்று அழைக்கப்படும் பெரும் காட்டுத் தீ அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அங்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஹெக்ரேயர் பரப்பளவுக்கு காடுகள், தாவர இனங்கள் அழிந்துள்ளன.

குமாரதாஸன்.
பாரிஸ்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...