6 30
உலகம்செய்திகள்

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் படையினர்

Share

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் படையினர்

உக்ரைன்(ukraine) ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்ய (russia)பாதுகாப்பு அமைச்சகம் இன்று(12) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன.

மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோவனோவ்கா கிராமத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படைகள் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்,(donald trump) உலகில் நடக்கும் போர்களை தான் நிறுத்தப்போவதாக அறிவித்தார்.

இந்த சூழலில் பாரிசில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்த டிரம்ப் ரஷ்யாவிற்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி புடின்(pudin) எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...

17 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டண அதிகரிப்பு: நாளை முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள்!

இலங்கையில் இன்று (மார்ச் 23, 2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை...

16 19
செய்திகள்உலகம்

கச்சா எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி: 100 டொலருக்கும் கீழ் சரிந்த பிரெண்ட் கச்சா எண்ணெய்!

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அடுத்த 5 நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜனாதிபதி...

15 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – அவுஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்த இணக்கம்: ஜனாதிபதியுடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...