3 12
இலங்கைசெய்திகள்

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

Share

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் கடற்றொழிலாளர்களுக்கு இடையில், பாக் வளைகுடாவில் நீடித்து வரும் கடற்றொழிலாளர் மோதலுக்கு இந்திய தரப்புகள் இழுவை முறையை பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல வருடங்களாக கடற்றொழிலாளர் பிரச்சினை முக்கிய இராஜதந்திரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த வாரம் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து இனக்குழுக்கள் மற்றும் புவியியல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தமது கட்சிக்கு உள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் 17.2 கிலோவாக இருந்த நாட்டின் தனிநபர் மீன் நுகர்வு இப்போது 11.07 கிலோவாகக் குறைந்துள்ளது. இது மக்களின் புரத உட்கொள்ளல் குறைவதைப் பிரதிபலிக்கிறது.

இந்தநிலையில், ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய, இலங்கையின் கடல் மற்றும் நமது கடல் பல்லுயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பலருக்கு இன்னும் தமிழ்நாட்டில் குடும்ப உறவுகள் உள்ளன.

எனவே, கடற்றொழில் பிரச்சனையில் பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என இந்திய மற்றும் தமிழக மக்களையும் அரசாங்கங்களையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...