5 14
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

Share

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து ஜனாதிபதி அநுர இந்திய பிரதமருடன் கலந்துரையாடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், நேற்று(10) யாழ். மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சம்மேளனத் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

நாம் பலமுறை இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் தொடர்ச்சியாக நமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம்.

இந்திய இழுவைமடி படகுகளினால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள்.

மேலும், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வலைகள் எடுத்து வரப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்கள் வழங்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு தெரிவித்த நிலையிலும் இதுவரை கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் உரிய கவனம் எடுத்து தேங்கி கிடக்கும் வலைகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, எமது கடற்றொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினையான இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய பிரச்சினை இந்திய பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசி எமது ஜனாதிபதி அநுர தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...