6 10
உலகம்செய்திகள்

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

Share

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4531 பேர் சென்றுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர்கள் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறுவப்பட்ட இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் பணிபுரிந்தவர்களாவர்.

இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை இஸ்ரேலிய வேலைகளுக்காக 1802 பேர் செல்ல உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.

இதேவேளை இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலை தேடுபவர்கள் குலுக்கல் முறையின் கீழ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மோசடியாக பணம் பெறும் நபர்கள் மற்றும் குழுக்களை பணியகம் கண்டறிந்துள்ளது.

அதனடிப்படையில், மோசடியாக பணம் பெறுவது அல்லது கொடுப்பது இலஞ்ச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனவும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும், சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் இருப்பின் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் 1989 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...