6 10
உலகம்செய்திகள்

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

Share

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4531 பேர் சென்றுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர்கள் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறுவப்பட்ட இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் பணிபுரிந்தவர்களாவர்.

இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை இஸ்ரேலிய வேலைகளுக்காக 1802 பேர் செல்ல உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.

இதேவேளை இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலை தேடுபவர்கள் குலுக்கல் முறையின் கீழ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மோசடியாக பணம் பெறும் நபர்கள் மற்றும் குழுக்களை பணியகம் கண்டறிந்துள்ளது.

அதனடிப்படையில், மோசடியாக பணம் பெறுவது அல்லது கொடுப்பது இலஞ்ச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனவும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும், சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் இருப்பின் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் 1989 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...